ஆய்த எழுத்து மற்றும் பொறியாளர் பா.வே.மாணிக்கம்

ஆய்த எழுத்து என்பது தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துகளில் ஒன்று. எனவே தற்காலத்தில் யாரும் பயன்படுத்துவது இல்லை 🙂

  • ஆய்த எழுத்தென்பது “முப்பாற்புள்ளிகள்” ( 3 droplets ).
  • ஆயுதமாகிய ” கேடயம் ” ( armour) போலிருப்பதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம்.
  • அல்லது “ஆய்தலாகிய” பிரித்தல் தொழிலைச் செய்வதால் “ஆய்ந்த” எழுத்து என அழைக்கப்பட்டிருக்கலாம்.
  • ஆங்கிலத்தில் a[h] என்பதை உச்சரிப்பதைப் போல உச்சரிக்க வேண்டும்.
  • இவ்வெழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலஅளவு “1/2” மாத்திரை.
  • சொற்களில் இது மேலும் குறைந்து “1/4” மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு ஆய்தம் குறைந்து ஒலிப்பதை “ஆய்தக்குறுக்கம்” என்பர்.
  • ஆய்த எழுத்தை அடுத்து ” வல்லெழுத்து ” ( க் , ச் , ட் , த் , ப் , ற் ) சார்ந்த உயிர்மெய் எழுத்துகளே வரும்.
  • ஆய்த எழுத்தின் முன்னர் குறில் தான் வரும். [ பண்டைய இலக்கண வழக்கு ]

தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பொதுப்பணித்துறைப் பொறியாளர் ( PWD Engineer) திரு. பா.வே. மாணிக்கனார் [ 1871 – 1931 ] , பல்வேறு துறைகளில் மிக்க பயிற்சி உள்ளவராயினும் தமிழ்ப்பற்றுக் காரணமாகப் பல ஆராய்ச்சிகள் செய்து “ஆய்த எழுத்தை” மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவந்தார்.

முதலில் பண்டைய வழக்கைப் பார்க்கலாம்.

பயிற்சி 1:

1.   பல்துளி + ஆறு  =>  பல துளிகளால் ஆன ஆறு

2.   ப + ல் + துளி + ஆறு

3.   ப + ற் + துளி + ஆறு     

     புணரியலில் 
     ‘ல்’ ->’ற்’ ஆக மாறும்  
      எ.க.   கல் + சிலை  => கற்சிலை

4.   ப + ற் + த்உ + ளி  + ஆறு                        
     ப + ற் +  உ +  ளி +  ஆறு     

     புணரியலில் 'ற'கரம் அடுத்து வரும் 
      'த'கரம் கெடும்

5.   ப  +  _  +  ற்உ    + ளி     +    ஆறு     

      'ற'கரம் தன்னிடத்தில் இருந்து பிரிந்துசென்று
      'உ'கரத்தொடு சேரும். இந்தப் பிரித்தலை(ஆய்தலை) 
       நிகழ்த்த ஆய்தம் தோன்றும்

6.   ப  +  ஃ  +   று  +  ளி       +   ஆறு                           

7.   பஃறுளி ஆறு               [ pahruli ]

பயிற்சி 2:

1.   உயர்திணை  –   கடவுள்   மனிதர்    நரகர்
     அல்திணை   –   மற்ற உயிருள் /உயிரல் (உயிர் அல்லாத)

2.   அல்திணை   –   அல் + திணை  
  
                  –   அல் +         +   தி     +  ணை

                  –   அ   +  ல்     +   த்இ    +  ணை

                  –   அ   +  ற்     +   த்இ    +  ணை

                  –   அ   +  ற்     +   _இ     +  ணை

                  –   அ   +  _      +   ற்இ    +  ணை  
                        
                  –   அ   +  ஃ      +    றி    +  ணை

                  –   அஃறிணை

தமிழ் மொழியில் F என்ற ஓசை இல்லை.

FAST – பாஸ்ட்
COFFEE – காபி என்றே எழுதி வந்தனர்.

‘F’ போன்ற வேறு மொழி எழுத்துகளைத் தமிழ்ப்படுத்தத் தமிழறிஞர் திரு. பா.வே. மாணிக்கனார் ‘ஆய்த’ எழுத்தைப் பயன்படுத்தலாம் என வழி செய்தார்

FAST – பாஸ்ட் – ஃபாஸ்ட்
COFFEE – காபி – காஃபி

ஆய்த எழுத்து எடுத்துக்காட்டு

நீலகிரி மாவட்டம் ” பர்லியார் “
கன்னியாக்குமரி மாவட்டம் ” பரளியார் “
ஆய்தல் – ஆய்ஞ்சு : வட்டார வழக்கு
சங்கப் பாடல்களில் ‘ பஃறுளி ஆறு ‘

Tamil Scholar Engineer P.V.Manickam

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil

Scroll to Top